Contact Us

Tips Category View

இஞ்சித் தைலம் (அகஸ்தியர் வைத்திய காவியம்)

தேவையான பொருட்கள்:
1. இஞ்சிச் சாறு                                 -800 மி.லி.
2. முசுமுசுக்கை சாறு                     -800 மி.லி.
3. கையாந்தகரைச் சாறு              -800 மி.லி.
4. நல்லெண்ணெய்                      -800 மி.லி.
5. பசும்பால்                                      -800 மி.லி.
6. சந்தனம்                                        -87.5 கி
7. மிளகு                                             -87.5 கி
8. குங்குமப்பூ                                   -87.5 கி
9. வெட்டி வேர்                                 -17.5 கி
10. சாம்பிராணி                                -3.5 கி

தயாரிக்கும் விதம்:
இஞ்சிச்சாறு, முசுமுசுக்கைச் சாறு கையாந்தகரைச் சாறு, நல்லெண்ணெய், பசுவின் பால் இவ்வனைத்தையும் தைலப் பாத்திரலிட்டு சந்தனக் கட்டையும் மிளகும் பசும்பால் விட்டரைத்து அந்த எண்ணெயில் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகலத்தினுள் குங்குமப்பூ வெட்டி வேர் சாம்பிராணி இம்மூன்றையும் பொடித்து தூவி இதில் வடித்தெடுத்து வைத்த தைலத்தை பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

உபயோக முறை :
வெளிஉபயோக முறை.

தீரும் நோய்கள் :
இத்தைலத்தால் ஸ்நானஞ் செய்ய உச்சந்தலை நோய் வாதத்தாலுண்டாகிய தேகக் கடுப்பு, அதிகரித்த காது நோய்கள், முகநோய், கப நோய் போன்ற நோய்கள் குணமாகும்.