தேவையான பொருட்கள் :
1. கழற்சி வேர்ப்பட்டை -700 கி
2. தண்ணீர் -8.4 லி
3. கழற்சி பருப்பு -175 கி
4. கழற்சி கொழுந்து -70 கி
5. விளக்கெண்ணை -1.4 லி
6. ஏலம் -17.5 கி
7. பரங்கிப்பட்டை -17.5 கி
8. வால்மிளகு -17.5 கி
9. சன்ன லவங்கப்பட்டை -17.5 கி
10. நேர்வாளம் -17.5 கி
11. ரசகற்பூரம் -17.5 கி
12. சுத்தமான நீர் -17.5 கி
செய்முறை :
கழற்சிப் பட்டையை இடித்து தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி 1500 லி ஆக சுண்ட வைத்துக் கொண்டு கழற்சி இலை, கழற்சிப் பருப்பு இவ்விரண்டையும் நன்கரைத்து எல்லாவற்றையும் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சவும். ஏலம், இலவங்கப்பட்டை, பறங்கிப்பட்டை, வால்மிளகு போன்ற சரக்குகளைப் பொடித்து எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும். வடிகலத்தில் சுத்தி செய்த நேர்வாளம், இரசக் கற்பூரம் இவ்விரண்டையும் அரைத்து நன்கு கலந்து வைக்கவும்.
உபயோக முறை :
உள் உபயோகம் மட்டும்.
அளவு :
3 - 5 மி.லி. வீதம் சற்று வெதுப்பி காலையில் ஒரு வேளை மட்டும் கொடுக்கலாம்.
நோயின் தன்மைக்கேற்ப 3 முதல் 5 நாட்கள் வரை கொடுக்கலாம்.
தீரும் நோய்கள் :
விரைவாயு, விரைவீக்கம், உடம்பு வீக்கம், அடிக் குடலைப் பற்றி வாயு, மலச்சிக்கல் ஆகியன குணமாகும்.