தேவையான பொருட்கள் :
1. நல்லெண்ணெய் -1.4 கி.கி
2. பசும்பால் -1.4 கி.கி
3. இளநீர் -4 கி
4. தாமரை வளையம் -4 கி
5. வெட்டிவேர் -4 கி
6. சந்தனவேர் -4 கி
7. விலாமிச்சம் வேர் -4 கி
8. கஸ்தூரி மஞ்சள் -4 கி
9. தேற்றான் கொட்டை -4 கி
10. கோரைக் கிழங்கு -4 கி
11. சீரகம் -4 கி
12. 12.ஏலம் -4 கி
13. பூலாங்கிழங்கு -4 கி
14. பச்சிலை -4 கி
15. செங்கழுநீர் கிழங்கு -4 கி
16. தண்ணீர் விட்டான் கிழங்கு -4 கி
17. அதிமதுரம் -4 கி
18. மஞ்சிட்டி வேர் -4 கி
19. செண்பக மொக்கு -4 கி
20. புனுகுச் சட்டம் -4 கி
21. குங்குமப்பூ -4 கி
தயாரிக்கும் விதம் :
நெ.4 முதல் 19 வரையிலான சரக்குகளை பொடித்து வைக்கவும். நெ. 1-3 வரையுள்ள சரக்குகளை சேர்த்து அடுப்பிலேற்றி காய்ச்சவும்.
பொடித்த சரக்குகளை எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும். வடிகலத்தில் புனுகுச் சட்டம், குங்குமப்பூ இவ்விரண்டையும் பொடித்துச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம் மற்றும் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
தீரும் நோய்கள் :
சுவாசத்தைத் தடுக்கும் பீனிசம், இரத்த பீனிசம், திரவிழு தல் முதலிய 18 வகை பீசினங்கள் கண் திமிரம் ஆகியன.