Contact Us

Tips Category View

துர்வாதி தைலம் (தேரையர் தைல வர்க்கம்)

தேவையான பொருட்கள்:
1. அருகம்புல்                  -100 கி
2. பால்                              -200 கி
3. நல்லெண்ணெய்       -100 மி.லி.

தயாரிக்கும் விதம் :                
அருகம்புல்லின் கிழங்கினது தோலையும் கணுக் களையும் நீக்கி உரலிலிட்டு இடித்து சாற்றினை வடித்து அச்சாற்றுடன் நல்லெண்ணெயும் பசும்பாலையும் விட்டு நன்கு கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சவும். தைலப்பதம் வந்தவுடன் இறக்கி வைத்து வடித்து பத்திரப்படுத்தவும்.

உபயோக முறை :
வெளி உபயோகம் மட்டும்.

தீரும் நோய்கள் : 
வாதம், மூலச்சூடு, பற்பல மருந்துகளை உண்டதால் உண்டான உஷ்ணம், ஆண்குறி மற்றும் வயிறு எரிவு, துர்வாசனை மிகுந்த புண்கள், பித்த வியாதிகள், சொறிகள், நீர்க்கோவை என்கிற பீனிசம் முதலிய நோய்கள் நீங்கி விடும்.