தேவையான பொருட்கள்:
1. அருகம்புல் -100 கி
2. பால் -200 கி
3. நல்லெண்ணெய் -100 மி.லி.
தயாரிக்கும் விதம் :
அருகம்புல்லின் கிழங்கினது தோலையும் கணுக் களையும் நீக்கி உரலிலிட்டு இடித்து சாற்றினை வடித்து அச்சாற்றுடன் நல்லெண்ணெயும் பசும்பாலையும் விட்டு நன்கு கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சவும். தைலப்பதம் வந்தவுடன் இறக்கி வைத்து வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம் மட்டும்.
தீரும் நோய்கள் :
வாதம், மூலச்சூடு, பற்பல மருந்துகளை உண்டதால் உண்டான உஷ்ணம், ஆண்குறி மற்றும் வயிறு எரிவு, துர்வாசனை மிகுந்த புண்கள், பித்த வியாதிகள், சொறிகள், நீர்க்கோவை என்கிற பீனிசம் முதலிய நோய்கள் நீங்கி விடும்.