தேவையான பொருட்கள்:
1. கையாந்தகரை -1.2 கி. கி
2. நெல்லிக்காய் -1.2 கி.கி.
3. ஆலம் விழுது -1.2 கி. கி
4. தழுதாழை -1.2 கி.கி.
5. தண்ணீர் விட்டான் கிழங்கு -1.2 கி.கி.
6. வாழைக்கிழங்கு -1.2 கி.கி.
7. நல்லெண்ணெய் -1.2 கி.கி.
8. பசுவின் பால் -1.2 கி. கி
9. நெய்தற் கிழங்கு -8.75 கி.கி.
10. அல்லிக்கிழங்கு -8.75 கி. கி
11. சந்தனத்தூள் -8.75 கி. கி
12. வெட்டி வேர் -8.75 கி.கி.
13. விலாமிச்சு வேர் -8.75 கி. கி
14. வசம்பு -8.75 கி.கி.
15. அதிமதுரம் -8.75 கி. கி
16. முசுமுசுக்கை -8.75 கி.கி.
17. தாமரைப் பூவிதழ் -8.75 கி.கி.
18. தூதுவளை வேர் -8.75 கி.கி.
19. மஞ்சிட்டு வேர் -8.75 கி.கி.
20. கோரைக் கிழங்கு -8.75 கி.கி.
21. சிறு செண்பகப்பூ -8.75 கி.கி.
22. சடாமஞ்சில் -8.75 கி.கி.
23. தேவதாரு -8.75 கி. கி
24. நன்னாரி வேர் -8.75 கி.கி.
25. வேங்கைவைரம் -8.75 கி.கி.
26. அமுக்கராக்கிழங்கு -8.75 கி. கி
27. கோஷ்டம் -8.75 கி.கி.
28. கற்பூரம் -8.75 கி.கி.
29. பெருங்குரும்பை -8.75 கி. கி
30. சதகுப்பை -8.75 கி.கி.
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை பால்விட்டரைத்து கரைத்து நல்லெண்ணெயில் விட்டுக் காய்ச்சி பக்குவத்தில் வைத்துக் கொண்டு பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம் மட்டும்.
தீரும் நோய்கள்:
இதை ஸ்நானம் செய்தாலும் நசியம் பண்ணினாலும் தலை நோய், கண் நோய்கள், செவிடு முதலிய ரோகங்கள் தீரும்.