தேவையான பொருட்கள்:
1. உளுந்து -1.5 கி.கி.
2. தண்ணீர் -6 லி
3. பூனைக்காலி விதைப்பொடி -4 கி
4. சதகுப்பை -4 கி
5. பேரரத்தை -4 கி
6. சுக்கு -4 கி
7. மிளகு -4 கி
8. திப்பிலி -4 கி
9. வெட்பாலைப்பட்டை -4 கி
10. இந்துப்பு -4 கி
11. அதிமதுரம் -4 கி
12. வசம்பு -4 கி
13. நல்லெண்ணெய் -1.5 லிட்டர்
14. பால் -1லிட்டர்
செய்முறை:
உளுந்தைத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி கியாழமாக சுண்ட வைத்து, வடித்து 3 முதல் 12 வரையில் உள்ள சரக்குகளைப் பொடித்து வெள்ளாட்டுப் பாலில் அரைத்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும். இந்தத் தைலத்தை தானிய புடமாக பத்து நாட்கள் வைத்து எடுக்கவும். (அதாவது தைலத்தை மண்பாத்திரத்தில் ஊற்றி நெல்லில் வைக்கவும்)
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் வியாதிகள்:
பலவித வாத நோய்கள், நடுக்கம் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் தீரும்.