தேவையான பொருட்கள் :
1. விளக்கெண்ணெய் -1.6 லி.
2. சோற்றுக் கற்றாழைச் சாறு -1.6 லி.
3. வல்லாரைச் சாறு -800 மி.லி.
4. களிப்பாக்கு -70 கி
5. கடுக்காய் -70 கி
6. கொடிவேலி வேர் -70 கி
7. கடுகு ரோகி -70 கி
8. மிளகு -70 கி
9. வெங்காயம் -70 கி
செயல்முறை :
மேற்கண்ட மருந்துச் சரக்குகளைப் பொடித்து விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும்.
உபயோக முறை:
குழந்தைகளுக்கு 1.5 மி.லி. வரை பெரியவர்களுக்கு 5-10 மி.லி. வெந்நீருடன் உள்ளுக்குக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
நீர்க்கட்டு, வாயு வீக்கம், மூலச்சூடு, வாயுத் தொல்லை, பொருமல், பித்தம் முதலிய வியாதிகளைப் போக்கும்.