தேவையான பொருட்கள்:
1. நொச்சியிலைச் சாறு -2.8 லி.
2. கரிசலாங்கண்ணிச் சாறு -2.8 லி.
3. இந்துப்பு -17.5 கி
4. சிற்றரத்தை -17.5 கி
5. திப்பிலி -17.5 கி
6. ஆமணக்கு வேர் -17.5 கி
7. குடசப்பாலை வேர் -17.5 கி
8. கிரந்திதகரம் -17.5 கி
9. சுக்கு -8.8 கி
10. கோஷ்டம் -17.5 கி
11. தேற்றான்கொட்டை -17.5 கி
12. சதகுப்பைப் -175 கி
13. வாய்விடங்கம் -17.5 கி
14. அதிமதுரம் -17.5 கி
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை நன்கு இடித்து தேவையான அளவு வெள்ளாட்டுப் பாலில் அரைத்து மேற்படி சாற்றில் கரைத்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி, மெழுகு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அளவு:
வெளி உபயோகம். 8 நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம். 4 நாட்களுக்கு ஒருமுறை ஓரிரு துளிகள் மூக்கில் (நசியம் செய்தல்) விடலாம்.
தீரும் வியாதிகள்:
மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தலைக்கனம், தலையில் நீரேற்றம், ஜலதோஷம் மற்றும் அனைத்துவித பீனிச நோய்கள்.