தேவையான பொருட்கள்:
1. ஊமத்தன் இலைச்சாறு -3.5 லிட்டர்
2. தேங்காய் எண்ணெய் - 1.4 லிட்டர்
3. மயில் துத்தம் -350 கி
செய்முறை :
ஊமத்தன் இலைச்சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி சாறு ஓரளவுக்கு சுண்டியபின் துத்தத்தைப் பொடித்து எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
இதனை மேல் பூச்சாக உபயோகிக்கவும். சீழ்வடியும் காதில் போடலாம். துணியில் தடவி புண்ணுக்குப் போடவும்.
தீரும் நோய்கள் :
படை, சொறி, சிரங்கு, துஷ்விரணம், ஊன் வளருதல், கசியும் படை, பிளவை, காதில் சீழ் வடிதல், ஒழுகும் விரணங்கள் ஆகியன.