தேவையான பொருட்கள்:
1. குறுந்தொட்டி வேர் -250 கி
2. சுக்கு -35 கி
3. மிளகு -35 கி
4. ஏலம் -35 கி
5. நல்லெண்ணெய் -800 மி.லி
செய்முறை:
குறுந்தொட்டி வேரை இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு கியாழம் செய்து அதில் சுக்கு, மிளகு, ஏலம் அரைத்துப் போட்டு நல்லெண்ணையுடன் காய்ச்சி வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை:
வெளி உபயோகம்.
தீரும் வியாதிகள்:
வாத ரோகங்கள், கீழ் வாயு, தோள்பட்டை வலி முதலியன.