தேவையான பொருட்கள்:
1. இரச கற்பூரம் -4 கி
2. ஏலம் -4 கி
3. மயில் துத்தம் -4 கி
4. பால் துத்தம் -4 கி
5. கற்பூரம் -4 கி
6. சுத்தி செய்த ரசம் -4 கி
7. கார்போக அரிசி -4 கி
8. மிருதார் சிங்கி -4 கி
9. கஸ்தூரி மஞ்சள் -4 கி
10. நீரடி முத்துப்பருப்பு -4 கி
11. காட்டுசீரகம் -4 கி
12. சுத்தி செய்த கந்தகம் -4 கி
13. தேங்காய்ப் பால் -தேவையான அளவு
செய்முறை:
1 முதல் 12 வரையுள்ள சரக்குகளை நன்கு பொடித்து தேங்காய்ப் பாலில் சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
2-5 துளிகள் காலையில் மட்டும் பாலுடன் உள்ளுக்குள் கொடுக்கவும். மேலுக்கும் தடவலாம். கரப்பானுள்ள இடத்தில் மூன்று நாட்கள் வரை தைலத்தைத் தொடர்ந்து கோழியிறகால் தடவி வந்து நான்காம் நாள் உசிலையை அரைத்து தேய்த்து இள வெந்நீரில் குளிக்கவும்.
தீரும் வியாதிகள்:
கரப்பான், சிரங்கு, சொரி,படை,கொப்பளம் மற்றும் தோல் நோய்கள்.