தேவையானவை பொருட்கள்:
1. சுக்கு -2.800 கி.கி
2. பசும்பால் -3லி
3. நல்லெண்ணெய் -3 கி.கி.
4. சிற்றரத்தை -8.75 கி
5. மிளகு -8.75 கி
6. திப்பிலி -8.75 கி
7. கோரைக்கிழங்கு -8.75 கி
8. மஞ்சிட்டி வேர் -8.75 கி
9. கடுக்காய் -8.75 கி
10. நெல்லி வற்றல் -8.75 கி
11. தான்றிக்காய் -8.75 கி
12. தண்ணீர்விட்டான் கிழங்கு -8.75 கி
13. அகில் கட்டை -8.75 கி
14. எருக்கன் வேர்ப்பட்டை -8.75 கி
15. கடுகுரோகிணி -8.75 கி
16. கோஷ்டம் -8.75 கி
17. கொடிவேலி வேர் -8.75 கி
18. தேவதாரு கட்டை -8.75 கி
19. சந்தனக்கட்டை -8.75 கி
20. வெள்ளை குங்கிலியம் -8.75 கி
21. செவ்வியம் -8.75 கி
22. ஆமணக்கு வேர் -8.75 கி
23. வெள்ளை லோத்திரப்பட்டை -8.75 கி
24. பேரீச்சங்காய் -8.75 கி
25. உலர் திராட்சை -8.75 கி
26. இந்துப்பு -2 கிராம்
27. குங்குமப்பூ -2 கிராம்
28. கஸ்தூரி -2 கிராம்
29. சுத்தமான நீர் -24 லி.
செய்முறை :
தோல் நீக்கி சுக்கை தண்ணீரிலிட்டு காய்ச்சி 6 லிட்டராக சுண்ட வைத்து, வடித்து அத்துடன் பசுவின் பால் நல்லெண்ணெய் சேர்த்து இத்துடன் எஞ்சியுள்ள சரக்கினை பொடித்துக் கலந்து, காய்ச்சி பதத்தில் வடிக்கவும். வடிகலத்தில் கஸ்தூரி, குங்குமப்பூ, தூள் செய்து கலந்து வைக்கவும். இத்தைலத்தை ஒரு மாதம் வரை நெற்புடத்தில் வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
வெளிப்பூச்சு மற்றும் தேய்த்தும் குளிக்கலாம்.
தீரும் நோய்கள்:
• உடம்பில் தேய்க்க ஆமவாதமும் ஆவர்த்த வாதமும் தீரும்.
• மூக்கில் விட தலை நோயும் பீனிசமும் தீரும்.
• கொப்பளிக்க பல்லரணை தீரும்.
• காதிலிட செவிக்குத்தல் தீரும்.
• தினமும் காலையில் தேய்க்க தலைவலி, தலை நோய்கள் தீரும்.