Contact Us

Tips Category View

சந்தனாதி தைலம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. விலாமிச்சம் வேர்                      -350 கி
2. சந்தனம்                                    -350 கி
3. ஆவாரம்பட்டை                         -350 கி
4. நல்லெண்ணெய்                      -800 கி
5. நன்னாரி வேர்                           -35 கி

செய்முறை:
சந்தனம், விலாமிச்சம் வேர், ஆவாரம்பட்டை முதலிய வற்றை இடித்து 1 லி நீரில் போட்டு எட்டிலொன்றாய் வழிய வைத்து வடித்து அத்துடன் நல்லெண்ணெய் விட்டு அதில் நன்னாரி வேர்ப்பட்டையை அரைத்துப் போட்டு காய்ச்சி வடிக்கவும்.

உபயோகிக்கும் அளவு :
வெளி உபயோகத்திற்கு மட்டும். ஆண்மைக் குறைவிற்கு ஆண் குறியில் தடவவும்.

தீரும் வியாதிகள்:
ஆண்மைக் குறைவு, மலட்டுத் தன்மை, துர்நாற்றம் அதிக வியர்வை, தலைவலி, கண்காந்தல் ஆகியவை நீங்கும்.