செய்முறை :
கீழ்புறம் சிறு துவாரங்களிலிட்டு கம்பிகள் சொருகிய ஒரு பானையில் முக்கால் பாகம் அளவுக்கு முற்றிய தேங்காய் சிரட்டைகளைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு மூடி குழித் தைல விதிப்படி புடமிட்டுத் தைலம் தயாரிக்கவும்.
உபயோகிக்கும் முறை :
வெளி உபயோகம். சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் உபயோகிக்கலாம். மற்ற இடத்தில் பட்டால் எரிச்சலைத் தரும்.
தீரும் நோய்கள்:
சொரி, படை, சரும வியாதிகள் குணமாகும்.