Contact Us

Tips Category View

அரக்குத் தைலம் (தேரையர் தைல வர்க்கம்)

தேவையான பொருட்கள்:
1. கொம்பரக்கு                                -1.12 கி. கி
2. சந்தனம்                                     -35 கி
3. கஸ்தூரி மஞ்சள்                         -35 கி
4. கோஷ்டம்                                     -35 கி
5. இலவங்கப்பட்டை                      -35 கி
6. இலவங்கப்பத்திரி                     -35 கி
7. பச்சிலை                                       -35 கி
8. அதிமதுரம்                                   -35 கி
9. சடாமஞ்சில்                                 -35 கி
10. பூலாங் கிழங்கு                           -35 கி
11. கடுகு ரோகிணி                          -35 கி
12. ஏலம்                                               -35 கி
13. சதகுப்பை                                    -35 கி
14. கிளியூரல்பட்டை                        -35 கி
15. பூச்சாந்திரப்பட்டை                  -35 கி
16. சீரகம்                                            -35 கி
17. கருஞ்சீரகம்                                 -35 கி
18. மெருகன் கிழங்கு                     -35 கி
19. பசுவின் பால்                              -6.4 லி.
20. நல்லெண்ணெய்                       -6.4 லி.
21. தயிர் தெளிவு                             - தேவையான அளவு
22. செவ்வல்லிக் கொடி                 -35 கி

செய்முறை:
கொம்பரக்கைத் துணியில் முடிந்து கட்டி தண்ணீரில் மூழ்க வைத்து எரித்து சுண்ட வைத்துக் கியாழத்தை வடித்து வைக்கவும். 2-17 வரையுள்ள சரக்குகளைப் பாலில் அரைத்து நல்லெண்ணெய் மற்றும் தயிர் தெளிவுடன் கலந்து காய்ச்சித் தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும். முப்பது நாட்கள் வரை உபயோகிக்கவும். நெற்புடத்தில் வைத்தெடுத்து

உபயோகிக்கும் முறை :
தலைக்கும், உடலுக்கும் தேய்க்கவும்.

தீரும் நோய்கள் :
சுரம், உடல் கடுப்பு, சந்திராவர்த்தம், சூர்யா வர்த்தம், மண்டை சூலை, இரைப்பிருமல், கற்றாழை நாற்றம், பல்வேர் வீக்கம், குரல் கம்மல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியன குணமாகும்.