தேவையான பொருட்கள்:
1. கொம்பரக்கு -1.12 கி. கி
2. சந்தனம் -35 கி
3. கஸ்தூரி மஞ்சள் -35 கி
4. கோஷ்டம் -35 கி
5. இலவங்கப்பட்டை -35 கி
6. இலவங்கப்பத்திரி -35 கி
7. பச்சிலை -35 கி
8. அதிமதுரம் -35 கி
9. சடாமஞ்சில் -35 கி
10. பூலாங் கிழங்கு -35 கி
11. கடுகு ரோகிணி -35 கி
12. ஏலம் -35 கி
13. சதகுப்பை -35 கி
14. கிளியூரல்பட்டை -35 கி
15. பூச்சாந்திரப்பட்டை -35 கி
16. சீரகம் -35 கி
17. கருஞ்சீரகம் -35 கி
18. மெருகன் கிழங்கு -35 கி
19. பசுவின் பால் -6.4 லி.
20. நல்லெண்ணெய் -6.4 லி.
21. தயிர் தெளிவு - தேவையான அளவு
22. செவ்வல்லிக் கொடி -35 கி
செய்முறை:
கொம்பரக்கைத் துணியில் முடிந்து கட்டி தண்ணீரில் மூழ்க வைத்து எரித்து சுண்ட வைத்துக் கியாழத்தை வடித்து வைக்கவும். 2-17 வரையுள்ள சரக்குகளைப் பாலில் அரைத்து நல்லெண்ணெய் மற்றும் தயிர் தெளிவுடன் கலந்து காய்ச்சித் தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும். முப்பது நாட்கள் வரை உபயோகிக்கவும். நெற்புடத்தில் வைத்தெடுத்து
உபயோகிக்கும் முறை :
தலைக்கும், உடலுக்கும் தேய்க்கவும்.
தீரும் நோய்கள் :
சுரம், உடல் கடுப்பு, சந்திராவர்த்தம், சூர்யா வர்த்தம், மண்டை சூலை, இரைப்பிருமல், கற்றாழை நாற்றம், பல்வேர் வீக்கம், குரல் கம்மல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியன குணமாகும்.