தேவையான பொருட்கள் :
1. புங்க எண்ணெய் -200 மி.லி.
2. வேப்ப எண்ணெய் -200 மி.லி.
3. இலுப்பை எண்ணெய் -200 மி.லி.
4. நல்லெண்ணெய் -200 மி.லி.
5. வெள்ளைப்பூண்டு -100 கி
6. வசம்பு -100 கி
7. சுக்கு -100 கி
8. பெருங்காயம் -100 கி
9. மிளகு -100 கி
10. திப்பிலி -100 கி
11. ஓமம் -100 கி
12. சதகுப்பை -100 கி
13. கிராம்பு -100 கி
14. சித்திரமூலம் -200 கி
15. தழுதாழைச்சாறு -100 மி.லி.
16. கற்பூரம் -100 மி.லி.
17. மெந்தால் -40 மி.கி.
18. தைமால் -20 மி.கி.
19. நீலகிரித் தைலம் -100 மி.லி.
செய்முறை :
எண்ணெய் மற்றும் சாறுகளைத் தவிர மற்ற சரக்குகளைப் பொடித்து சலித்து பின் எண்ணெய் மற்றும் சாறுகளுடன் கலந்து காய்ச்சித் தைலம் பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோகம் :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
மூட்டு வலி, வீக்கம், நரம்பு வலி, சுளுக்கு, தசைப் பிடிப்பு மற்றும் வாத வலிகள் போன்றவைகளை நீக்க ஏற்றது.