தேவையான பொருட்கள்:
செய்முறை:
சாமை மற்றும் உளுத்தம்பருப்பைநன்றாக அலம்பி 2 மணிநேரம் ஊற வைக்கவும்.இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து மாவாக அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அடுப்பில் எண்ணெயை சூடாக்கி மாவை சிறு சிறுவடைகளாக உருட்டிப் போடவும். பொன்னிறமானவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து சூடான வெந்நீரில் 1 மணிநேரம் போட்டு ஊற வைக்கவும். தயிரைநன்கு கடைந்து அதில் சீரகத்தூள் மிளகாய்த் தூள் மற்றும் உப்புசேர்க்கவும். இந்த கலவையை சிறிதுநேரம் வைத்திருக்கவும். தண்ணீரில் போட்ட வடைகளை மெதுவாக பிழிந்து தயிர் கலவையில் போடவும், அதன்மேல் புதினா சட்னி, ஸ்வீட் சட்னி சேர்த்து பொடியாக நறுக்கிய மல்லி இலையை சேர்க்கவும். பூந்தி சேர்த்து பரிமாறவும்.மாதுளை சேர்க்கலாம்.
பலன்கள்:
சாமையில் இரும்பு மற்றும் கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. வயிற்றுப்புண்கள் விரைவில் ஆறும் மலச்சிக்கலை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. உளுந்து,புதினா,சீரகம்,கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள் உடலுக்குமேலும் ஆரோக்கியம் தருகின்றன.