தேவையான பொருட்கள்:
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டுகப் தண்ணீரையும் ஒரு டீஸ்பூன் எண்ணெயையும்ஊற்றி அதில் சாமை அரிசியை சேர்த்துவேக வைக்கவும். அரிசி உதிரியாக இருக்க வேண்டும்.குழைய கூடாது. பின் நன்கு ஆறவைக்கவும். கடாயில் வெண்ணெயை ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சிவிழுது. மிளகாய்விழுது, நறுக்கிய வெங்காயம் இவற்றைச் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா பொடியுடன்ஏதேனும் கீரையை சேர்த்து தண்ணீர் சுண்ட வதக்கவும். பின் ஆறவைத்த சாதத்தைச்சேர்த்துக் கலக்கவும். 5-7 நிமிடம் அடுப்பிலேயே இருக்க விடவும். சூடாக உண்ண சுவையாக இருக்கும்.
பலன்கள்:
ஏதேனும் ஒரு கீரையைப்பயன்படுத்தி சமைப்பது குழந்தைகள் முதல்,பெரியவர்கள் வரை ஆரோக்கியம் தரும். இரத்த அணுக்கள் உற்பத்திக் குறைபாட்டை இது சரி செய்யும். மஞ்சள், இஞ்சி போன்றவை கிருமி நாசினியாகவும் சத்துப் பொருளாகவும் இருக்கின்றது.