தேவையான பொருட்கள்:
செய்முறை:
துவரம் பருப்பை அரைமணிநேரம் ஊற 'வைத்து, தண்ணீரைவடித்து மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பூரணத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைகொதிக்க வைக்கவும். அதில் 2 சொட்டு எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதை சாமை மாவில்சேர்க்கவும், நன்கு கட்டி இல்லாமல் கிளறவும். கையில் எண்ணெய் தடவி மாவை சிறுசிறுஉருண்டைகளாக உருட்டவும். இட்லி பானையில் 10 நிமிடம் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து அரைத்த துவரம் பருப்பு பூரணத்தை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும், வெந்த உருண்டைகளை அதனுடன் சேர்க்கவும், மெதுவாக கிளறவும் தேங்காய் எண்ணெயை விடவும். மிகவும் வாசனையாக இருக்கும். சுவையான அம்மணிபூர்ண கொழுக்கட்டை தயார்.
பலன்கள்:
சாமையுடன் புரதம் நிறைந்த துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் உடல் வலிமையை கொடுக்கிறது. கறிவேப்பிலை,தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் வைட்டமின் ஏ.பி.சிகாம்ப்ளக்ஸ் கிடைக்கிறது. காலை. இரவு உணவாக செய்துசாப்பிடலாம் எளிதில் ஜீரணமாகும்.