தேவையான பொருட்கள்:
செய்முறை:
கம்பையும், பார்லியையும் அலசி ஊற வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்சேர்த்து சூடானவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து ஒன்றாக வதக்கவும்.இதனுடன் 3 பங்கு தண்ணீர் சேர்த்து கம்பையும், பார்லியையும் மிதமான சூட்டில் வேகவைக்கவும். உப்பு, மிளகுத்தூள்,ஓமம், துளசி சேர்த்து பாத்திரத்தை மூடிவிடவும். பார்லி நன்றாக வெந்தவுடன் இறக்கி அருந்தலாம்.
பலன்கள்:
கம்பில் உள்ள இரும்புச்சத்து, ரத்தசோகையைத்தடுக்கும். குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் தன்மை கொண்டது. பார்லியில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக்கும். பசியைத் தூண்டும் ஆற்றல் பார்லி சூப்பிற்கு உண்டு.