Contact Us

Tips Category View

கம்புகஞ்சி

தேவையான பொருட்கள்:

  • கம்புகுருணை - 50 கிராம்
  • அரிசிகுருணை - 150 கிராம்
  • சீரகம் - 1/4 டீஸ்பூன்
  • மிளகு – 10
  • பொடியாகநறுக்கியபச்சைமிளகாய் – 2
  • பொடியாகநறுக்கியஇஞ்சி - 1/4டீஸ்பூன்
  •  உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • பொடியாகநறுக்கியமல்லிதழை - சிறிதளவு

செய்முறை:

       கம்பு குருணையை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாதி வெந்தவுடன் அரிசிகுருணையையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.வெந்தவுடன், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றையும் சேர்த்து வேகவிடவும் இறுதியாக மல்லி தழை தூவி இறக்கிபரிமாறவும்.

பலன்கள்:

        அனிமியா எனப்படும் இரத்த சோகை நோயைப் போக்கும்ஆற்றல் கொண்டது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இந்த கஞ்சியைக் குடித்துவரநன்றாக ஜீரணம் நடைபெறும் குடல் புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். அதிக அளவு இரும்புச்சத்துஉள்ளதால் ஹிமோகுளோபினை மேம்படுத்த உதவுகிறது.