தேவையான பொருட்கள்:
1. தாமரைப்பூ - 1935 மி.கி.
2. ஆவாரம் பூ - 2690 மி.கி.
3. ரோஜாப்பூ - 2000 மி.கி.
4. முருங்கைப்பூ - 250 மி.கி.
5. மதனகாமப்பூ - 250 மி.கி.
6. குங்குமப்பூ - 5 மி.கி.
7. வல்லாரை - 250 மி.கி.
8. அருகன்புல் - 250 மி.கி.
9. மஞ்சள் கரிசாலை -250 மி.கி.
10. வெள்ளை கரிசாலை - 250 மி.கி.
11. அவுரி - 250 மி.கி.
12. சிவகரந்தை - 100 மி.கி.
13. இஞ்சி - 200 மி.கி.
14. ஏலம் - 25 மி.கி.
15. கொத்தமல்லி - 250 மி.கி.
16. கிராம்பு - 200 மி.கி.
17. ஜாதிக்காய் - 100 மி.கி.
18. துளசி - 250 மி.கி.
செய்முறை:
மேலே குறிப்பிட்ட மூலிகைகளை சேகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து நன்கு கலந்து டப்பாக்களில் அடைத்து பயன்படுத்தவும்.
அளவு:
காலை முதல் அரை டீஸ்பூன் 250 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து தினம் 2 வேளை அருந்தவும்.
பயன்கள்:
காபி, டீ இவற்றிற்கு மாற்றாக உபயோகிக்கச் சிறந்தது. நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியூட்டி ஜீரணசக்தியைப் பெருக்கி இதயம், கல்லீரல், சிறுநீரகம், சீராக இயங்க வைக்கும். மற்றும் நோய்கள் வராமல் பாதுகாத்து உடலுக்கு வலிமையுண்டாக்கும்.