தேவையான சரக்குகள் :
1. வல்லாரைச் சாறு - 28.2 கி.
2. அன்னபேதி சாறு - 22.6 மி
3. அதிமதுரம் சாறு - 28.2 கி.
4. லவங்கம் சாறு - 28.2 கி.
5. சிறுநாகப் பூ சாறு - 37.6 கி.
6. ஏலம் - 28.2 கி.
7. மிளகு - 28.2 கி.
8. திப்பிலி - 28.2 கி.
9. சுக்கு - 28.2 கி.
10. அமுக்கரா - 188 கி.
தயாரிக்கும் விதம் :
மேலே கூறப்பட்ட மூலிகைகளைக் கழுவி சுத்தம்செய்து நீராவி கொள்கலன் (அ) மூடிய கலனில் கஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பினைப் பொருத்தி கஷாயத்தை தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையை பாகுபதத்தில் காய்ச்சி அத்துடன் தயாரித்து வைத்த கஷாயத்தைக் கலந்து சுத்தமான பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.
பயன்கள்:
நரம்புத் தளர்ச்சி, உடல் வளர்ச்சியின்மை, மூளைச் சோர்வு, தூக்கமின்மை, அசதி, பலஹீனம், இரத்தக்குறைவு, ஜீவசக்தி குறைவு போன்றவை குணமாகும்.
அளவு :
5 முதல் 10 மில்லி தினம் 3 வேளைகள்.