தேவையான சரக்குகள் :
1. கண்டங்கத்திரி - 69.9 மி.லி
2. துளசிச்சாறு - 69.9 மி.லி
3. வெள்ளை எருக்கு - 2.8 மி.லி
4. திப்பிலி - 2.8 மி.லி.
5. ஆடாதோடை - 3.73 மி.லி
6. அவுரி இலை - 1.82 மி.லி
7. தும்பை - 3.26 மி.லி
8. மிளகு - 4.66 மி.லி
9. அதிமதுரம் - 2.8 மி.லி
10. பச்சைக் கற்பூரம் - 2.8 மி.லி.
11. சர்க்கரைப் பாகு - 559.2 மி. கி
தயாரிக்கும் விதம் :
மேலே கூறப்பட்ட மூலிகைகளை கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன் அல்லது மூடிய கலனிலகஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பு பொருத்தி, கஷாயத்தைத் தனியே பிரித்தெடுக்கவும். மூலிகைச் சாற்றினை சர்க்கரையுடன் கலந்து பாகுபதத்தில் சுத்தமான பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.
பயன்கள்:
சளி, இருமல், பீனிசம், ஜலதோஷம் மற்றும் கபத்தினால் உண்டாகும் நோய்கள் தீரும்.
அளவு:
5 முதல் 10 மில்லி தினம் 3 வேளைகள்.